Our Feeds

Saturday, March 24, 2018

jazeem

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அபார வெற்றி...!



இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிகொண்டது.

இதற்கமைய, 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் மகளிர் அணி வசமானது.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களைப் பெற்றது.

நஹிடா கான் 46 ஓட்டங்களையும், ஜவேரியா கான் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஷஷிகலா சிறிவர்தன, அமா காஞ்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

216 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணியால் 41.3 ஓவர்களில் 107 ஓட்டங்களையே பெற முடிந்தது.

நிபுனி ஹன்சிகா அதிகபட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றதுடன், 6 வீராங்கனைகள் ஒற்றை இலக்குடன் ஆட்டமிழந்தனர்.

ஷானா மிர் 4 விக்கெட்களையும் நஷ்ரா ஷாது 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியை 108 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பாகிஸ்தான் மகளிர் அணி, தொடரை 3 -0 என்ற கணக்கில் தனதாக்கியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »