Our Feeds

Sunday, April 1, 2018

Tamilosai

தலையை வெட்டிய பின்னும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் ! அதிர்ச்சியில் உலகம்.


அமெரிக்காவில் நடைபெற்ற அதிசயம் இது. தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசயக் கதை இது.
இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான சம்பவம். 70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம் 'மிராக்கிள் மைக்' என்ற பெயரில் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது இச்சேவல்.
தலை வெட்டப்பட்ட பிறகு நீண்ட காலம் வாழ்ந்த சேவல் இதுதான் என்று கூறப்படுகிறது.
1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொலராடோவில், ஃப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான சம்பவம். 70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம் 'மிராக்கிள் மைக்' என்ற பெயரில் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது இச்சேவல்.
தலை வெட்டப்பட்ட பிறகு நீண்ட காலம் வாழ்ந்த சேவல் இதுதான் என்று கூறப்படுகிறது.
1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொலராடோவில், ஃப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
சுமார் 40 - 50 உருப்படிகளை வெட்டியிருப்பார்கள். ஆனால் அதில் ஒன்று மட்டும் உயிருடன் தத்தித் தத்தி நடைபோட்டுக் கொண்டிருந்தது.



ஓல்சென் மற்றும் கிளாராவின் கொள்ளுப் பேரன் ட்ராய் வாட்டர்ஸ் அந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறார், "வெட்டும் வேலை முடிந்ததும், கொள்ளு தாத்தாவும், பாட்டியும் இறைச்சியை சுத்தப்படுத்த தொடங்கியபோது, அதில் ஒன்று மட்டும் தலை வெட்டப்பட்ட நிலையிலும் அங்கும் இங்கும் தளிர் நடை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்."
தலையில்லா சேவலை தம்பதிகள் ஆப்பிள் பெட்டி ஒன்றில் வைத்து விட்டு சென்று விட்டார்கள். சற்று நேரத்தில் இறந்துவிடும், அதுவரை அது முண்டமாக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் காலையில் வந்து பார்த்தபோதும் அது உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார் ஓல்சென்.
சிறுவனாக இருந்தபோது தனது முப்பாட்டனிடம் இருந்து இந்தக் கதையை கேட்டிருக்கிறார் ட்ராய் வாட்டர்ஸ்.
மைக் என்ற அந்த சேவலை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.
வாட்டர்ஸ் சொல்கிறார், ''இறைச்சி விற்கும் சந்தைக்கு செல்லும்போது அந்த தலையில்லா சேவலையும் கொள்ளுத் தாத்தா எடுத்துச் சென்றார். அந்த காலத்தில் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல குதிரை வண்டியை பயன்படுத்துவார்கள்.''
"இந்த சம்பவத்தை கேட்டவர்களில் சிலர் இதை கட்டுக்கதை என்று கூற, அது உண்மையா இல்லையா என்று பந்தயங்களும் நடந்தது. பந்தயப் பொருட்களாக பியர் அல்லது அதுபோன்ற பல பொருட்கள் வைக்கப்பட்டன."
மைக்கைப் பற்றிய செய்தி அந்த வட்டாரம் முழுவதும் தீயைப் போல பரவியது. உள்ளூர் பத்திரிகை ஒன்று ஓல்ஸேனிடம் பேட்டி எடுக்க தனது செய்தியாளரை அனுப்பியது. தொடர்ந்து பல பத்திரிகையில் மைக் மற்றும் ஓல்செனின் புகைப்படங்களும், கட்டுரைகளும் வெளியாகின.
சில நாட்களுக்குப் பிறகு, 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரத்தில் கண்காட்சிகளை நடத்தும் ஹோப் வேட், ஃப்ரூட்டோவிற்கு வந்தார். மைக்கை பார்த்து உறுதி செய்துக் கொண்டார். தனது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருமாறு ஓல்ஸேனுக்கு அழைப்புவிடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »