Our Feeds

Sunday, April 1, 2018

Tamilosai

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு…



தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் கலேவெல, யட்டிகல்பொத்த பகுதியில் இன்று(02) அதிகாலை, முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், பெண் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »