இலங்கையின் கறுப்புத் தேயிலைக்கு சீனாவில் அதிகக் கேள்வி நிலவுவதாக தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தேயிலையின் தரம் மற்றும் குறைந்தளவான கிருமிநாசினி பயன்பாடு ஆகியன அதிகக் கேள்வி நிலவுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு இந்த ஆண்டு இரட்டிப்பாகும் சாத்தியம் உள்ளதென தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.