Our Feeds

Saturday, March 24, 2018

Tamilosai

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு...!


வௌிநாட்டு பணப்பெறுமதிக்கு அமைய நாட்டின் நாணயப்பெறுமதி குறைவடைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு கிழமைகளில் வாகனங்களின் விலை 5 வீதமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் கூறியுள்ளார்.

சாதாரண வாகனங்களின் விலை 50 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »