Our Feeds

Saturday, March 24, 2018

Tamilosai

சிவில் விமானசேவைக்கு இன்று முதல் திறப்பு...!



மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து விமான சேவைகள் மற்றும் சேவை நட­வ­டிக்­கை­களை இன்று 25 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஆரம்­பிக்க விமான நிலை­யங்கள் மற்றும் விமான சேவைகள் நிறு­வனம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.


மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் 1958 நவம்பர் 17 ஆம் திகதி சிவில் விமான சேவைகள் திணைக்­க­ளத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. யுத்தம் கார­ண­மாக கடந்த 25 வருட கால­மாக இந்த விமான நிலையம் இரா­ணுவ மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.


நாட்டில் தற்­போது சுமுக நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் உள்­நாட்டு வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வச­தியை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்­புக்கு விமான சேவைகளை நடத்த தனியார் விமான சேவைகள் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »